search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிபதி ராஜேஷ்வரன்"

    ஜல்லிக்கட்டு விசாரணையில் கால தாமதம் என சொல்வது தவறு என்று விசாரணை ஆணைய தலைவர் ராஜேஷ்வரன் தெரிவித்துள்ளார். #Jallikattu #Rajeswaran
    கோவை:

    கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு தொடர்பாக மேற்கு மண்டல விசாரணை ஆணைய தலைவராக நீதிபதி ராஜேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று கோவை வந்தார். விருந்தினர் மாளிகையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்கு வந்துள்ளேன். 3 நாட்கள் விசாரணை நடத்தப்படும்.

    14.9.18 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 31-ந்தேதி வரை மனுக்கள் பெறப்பட்டது.

    மேற்கு மண்டலத்தில் 247 மனுக்கள் வந்துள்ளது. 56 மனுக்கள் கோவையிலிருந்து வந்துள்ளது.3 நாட்களும் கோவை மாவட்டம் மட்டும் தான் விசாரிக்கப்படவுள்ளது.

    கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக எந்த வழக்காக இருந்தாலும் விசாரிக்க வேண்டியுள்ளது எனது பணியாகும்.

    இன்று 7 வழக்கு, நாளை 7 , நாளை மறுநாள் 8 வழக்குகள் விசாரிக்கப்படவுள்ளது. மாதம் 12 முறை வந்து வழக்குகள் விசாரிக்கப்படும்.

    கோவை 56, நீலகிரி 11, ஈரோடு 44, திருப்பூர் 40, சேலம் 50, நாமக்கல் 16, கரூர் 3, திண்டுக்கல் 27, வத்தலக்குண்டு 1 என 248 மனுக்கள் பெறப்பட்டது.

    கோவை முடித்தவுடன் அடுத்தடுத்த மாவட்டங்களில் விசாரிக்கப்படும். கால அவகாசம் கொடுக்கப்படவில்லை. இருந்தாலும் நிர்வாகத்தை கருத்தில் கொண்டு விரைவாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    ஜல்லிக்கட்டு விசாரணை கால தாமதம் என சொல்வது தவறு. உண்மையை கண்டு பிடிக்க விசாரணை ஆணையம் இருக்கிறது.

    விசாரணை ஆணையம் கண் துடைப்பு என்பது விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்காததால் அதுபோல் சொல்லப்படுகிறது.

    அறிக்கை சமர்பிக்க வேண்டியது தான் எங்கள் பணி. அதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அரசிடம் தான் கேட்க வேண்டும்.


    கோவை, சேலத்தில் ஜல்லிக்கட்டு விசாரணை முடிக்கப்பட்டு விட்டது. சென்னையில் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தமிழகம் முழுவதும் 547 வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக தொடரப்பட்டதால். எங்களை போன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு விசாரணையை முடிக்க 6,7 மாதங்கள் ஆகும். மதுரையில் டிசம்பர் மாதம் முடிவடையும்.1956 சாட்சியங்கள் விசாரிக்க வேண்டியுள்ளதால் இந்த காலம் தேவைப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Jallikattu #Rajeswaran
    ×